28. அருள்மிகு குந்தளேஸ்வரர் கோயில்
இறைவன் குந்தளேஸ்வரர்
இறைவி குந்தளநாயகி
தீர்த்தம் கணபதி தீர்த்தம்
தல விருட்சம்  
பதிகம் திருநாவுக்கரசர்
தல இருப்பிடம் திருக்குரக்குக்கா, தமிழ்நாடு
வழிகாட்டி தற்போது 'குரக்காவல்' என்று அழைக்கப்படுகிறது. தலைஞாயிறிலிருந்து சென்று பட்டவர்த்தி என்னும் ஊரை அடைந்து அங்குள்ள பாலத்தை தாண்டி வலதுபுறம் திரும்பிச் சென்றால் இக்கோயிலை அடையலாம். வைத்தீஸ்வரன் கோயிலிலிருந்து வடமேற்கே 11 கி.மீ. தொலைவிலும், கருப்பறியலூருக்கு தெற்கே ஒன்றரை கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ளது.
தலச்சிறப்பு

Kurakukka Gopuramஇராமேஸ்வரத்தில் இராமபிரான் லிங்க பிரதிஷ்டை செய்து வழிபாடு செய்தார். அதன் பின்னர் அனுமன், அந்த லிங்கத்தை தனது ஊரான சித்ரகூடத்திற்கு எடுத்துச் செல்ல முயன்றார். அதனால் லிங்கத்தை தனது வாலால் பெயர்த்தெடுக்க முயன்றார். அந்த முயற்சியில் அவரது வால் அறுந்தது. இதனால் கோபமடைந்த சிவபெருமான், 'உனது சக்தியும் இழந்து போகட்டும்' என்று சாபமிட்டார்.

அனுமன் சாப விமோசனம் கேட்க, 'எந்த இடத்தில் செல்லும்போது உனது வால் வளர்கிறதோ, அங்கு சிவபூஜை செய்து வழிபடு. அந்த தலம் உனது பெயராலேயே அழைக்கப்படும்' என்று அருளினார் சிவபெருமான். ஆஞ்சநேயர் வழிபட்டு சாப விமோசனம் இத்தலம் 'குரக்குக்கா' என்ற அழைக்கப்படுகிறது.

Thirukurakaval AmmanThirukurakaval Moolavarமூலவர் 'குந்தளேஸ்வரர்', 'குண்டல கர்ணேஸ்வரர்' என்னும் திருநாமங்களுடன், லிங்க வடிவில் காட்சி தருகின்றார். அம்பிகை 'குந்தள நாயகி', 'ஏலாசௌந்தரி அம்பிகை' என்னும் திருநாமங்களுடன் தரிசனம் தருகின்றாள்.

அகத்தியர், மார்க்கண்டேயர் ஆகியோர் இத்தலத்து இறைவனை வழிபட்டுள்ளனர்.

ஒவ்வொரு சனிக்கிழமையன்றும் அனுமனுக்கு சிறப்பு அர்ச்சனையும், ஒவ்வொரு அமாவாசை அன்று கார்யசித்தி யாகமும் நடைபெறுகிறது. கோயிலின் அருகில் கணபதி நதி ஓடுகிறது. இதுவே தல தீர்த்தமாகும்.

திருநாவுக்கரசர் ஒரு பதிகம் பாடியுள்ளார். இக்கோயில் காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.

முன்பக்கம்

   
 
© 2006 www.templeyatra.com - All Rights Reserved.
Designed by www.templeyatra.com